அஞ்சாமை! நேர்மை!! உண்மை !!!

03-09-2010. 09: 55:00

 

காற்றுக்கு பணம்கொடுக்க, கைநிறைய மாத்திரைகள் சாப்பிட்டு கார்த்துநின்று, மாரடிக்கும் புலம்பெயர் பெருமை-ஈட்டீகளே!!! நாட்டில் வீட்டுக்கு நாலு மரம் நடபணம் கொடுக்க நீங்கள் மறுப்பது ஏன்??

இறுதிப்போராட்டத்தின் சூழ்ச்சியால் பக்கவாதம்வந்த சூழலில் துன்புறும் “தமிழினத்தின்“
துயரங்களை கண்ட நிருபமா ராவ்!!!

03-09-2010. 09: 55:00

செயலர் நிருபமா ராவ் வவுனியா மானிக்பாம், செட்டிகுளம், கிளிநொச்சி, ஓமத்தை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திரிகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மறு குடியமர்வுப் பணிகளை நிருபமா பார்வையிட்டார். இலங்கை ராணுவத்தின் வசம் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இலங்கையில் இரு பிரிவான தமிழர்கள் உள்ளனர். இலங்கைத் தமிழர்கள் முதல் வகை. இவர்கள் யாழ்ப்பாண ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் பின்னர் கிழக்கு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள். இரண்டாவது வகை இந்திய வம்சாவ ளியினர். இவர்கள் காபி, தேயிலை தோட்டங்களில் பணிபுரிய பிரிட்டி ஷாரால் அழைத்துவரப் பட்டவர்கள். இவர்களில் சுமார் 1000 பேர் வவுனியாவில் குடியமர்த்தப்பட்டனர். போருக்குப் பின்னர் அவர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் திரும்புவதற்கு வழி வகை செய்யப்படும் என்று இலங்கை அரசு இப்போது உறுதியளித் துள்ளது. இராணுவத்திடம் அவர்கள் நிலம் உள்ளதால் அதை இராணுவம் இன்னும் ஒப்படைக்க வில்லை. அவர்களிடம் நிலத்தை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இடத்தை கண்டுபிடிக்க

அண்ணனின் ஆட்சியை வைத்து

இராணுவயுத்தியை தீட்டி அபிவிருத்தி நிலங்களைமுடக்கும்

“தம்பி“ என்று மக்கள் விசனம்!!!

புலிகளை அழித்து விட்டோம் என்று சர்வதேசத்தில் கூறி வெற்றிகள் கொண் டாடி மக்களின் அபிவிரு த்திக் காணி களில் இராணுவக் குடியிருப்புக் களை இருத்தி நாட்டின் பொருளா தாரத்திற்கு பங்கம் விளைவிக்கின்றது பாதுகாப்பு அமைச்சு. பாதுகாப்பை காரணம காட்டி புலிகள் ஆக்கிரமிப்பு என்ற பொய்யுரைத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்து நாட்டில் பரப்புரை செய்த ுவருகின்றது. இன்று மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஒரு அபகீர்தி ஏற்படுத்தி வருவதற்கு இத்தகைய திட்டம் உள்ளது என்று „ஈரனல்“ போன்ற முற்போக்கு ஊடகங்கள் தெளிவாக வெளிப்படை யாக பல ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கொழும்பில் இருந்து வெளியேற்ற முனைந்த மக்களை ஐனாதிபதியின் தலமையில் மீண்டும் அவர்கள் குடியிருப்புக்களில் மீண்டும் அமர்த்திய தும் குறிப்படத்தக்கது. இப்படியாக ஆளும் கட்சிக்கு அபகீர்த்தி தரும் விடயங்களை ஐனாதிபதியின் உத்தரி வின்றி இன்றைய காலத்தில் பாதுகாப்பு என்ற போர்வையில் அபிவிருத்திக் காணிகளை முட்டக்கினால் அது அங்கு செய்யும் விவசாயத்தை முடக்கும் நிலையாக அமைகின்றது. மக்கள் கிராமத்து மண்ணில் இறங்கினால் பட்டணத்தில் படுத்திருந்து சோற்றில் கைவைக்க முடியம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டும் இருந்தார் கள். இதேசமயம் தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திட்ட வட்டமாகத் தெரிவித்து வருவது பாரிய கவலைக்குரிய விடையம் என இலங்கை மக்கள் விசனம் தெரிவித்தும் வருகின்றார்கள். பயங்கர வாதத்தை இல்லா தொழித்ததன் மூலம் நாடு அடைந்துள்ள சமதானத்தை நிலை நாட்டவும், தேசியப் பாதுகாப்பை வலுப் படுத்திக் கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் பெரும் பான்மை விவசாயிகள கூட நல்ல கருத்துக்களை வெளிக்கொண்டு வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதன் ஓர் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங் களை கடத்து வதற்காக பயன்படுத்திய மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் நிலையான கடற்படை முகாம் ஒன்று அமைக்கப் பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் புலிகளின் முக்கிய தலைவரை பாதுகாப்பு கொடுத்து, எந்த ஓரு விசாரணையு மின்றி பங்களாக்களில் தங்கவைத்துக் கொண்டு வடக்கு காணி களை பாதுகாப்பு காரணம் சொல்லி இராணுவத்தை குடிNயுற்றுவது நியாயமா??? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் விசனத்தோடு எழுகின்றது.

பாதுகாப்பான இணையத்தளமா என்று அறிந்துகொள்ள

உறுதியும் ஒற்றுமையும் இல்லாத தலமைகளால்  தமிழர்களின்

பிரச்சனைக்கு யாரும் தலையிட
முன்வரமாட்டார்கள் என ஆய்வாளர்கள

இலங்கை விவகாரத்தில் இந்தியா வேகமாக செயற்பட முடியாமைக்கு பல காரணங்கள் இருக் கின்றன என்று இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் சுட்டிக்காட்டியுள்ளார். இதேசமயம் இறுதிப்போராட்டம் முடிந்த கையோடு இலங்கை சிறுபான்மைத் தலைவர் களுக்கு சுவிற்சர்லாந்தில் நடந்த ஒருக்கிணை ப்புக்கு வந்த தமிழ் தலைவர்கள தமது சுயநலத்தையே கருதி பலகூட்டங்களை வெளியில் வைத்து திமிர்வாதங்கள் கதைத்த வர்களாகவே காணப்பட்டார்கள். ஆனால் சிறுபான்மையின் நலம் கருதி நடந்த அந்த கூட்டத்தை தமக்கு சாதகமாக பிரியோசனப் படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் என்ற கொள்கையில் இந்தியா தொடர்ந்தும் இருக்கின்றது. ஆனாலும், இலங்கை அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதனால் இந்தியத் தலையீடுகனை மீண்டும் அன்று புலிகள் அரசுடன் சேர்ந்து கங்கனம் கட்டியது போல் ஆகிவிடு மல்லவா??? என்ற காரணமும் தொடர் கின்றது இதற்கு சிறுபான்மைத் தலைவர்கள் தமக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி செயல் படுத்த முன்வராதமை சிறுபான்மைக்கு பாரிய இழப்பை ஏற்படுத்து வதோடு உதவிக்கரங்கள் நீட்டும் அண்டைய நாடுகள் தள்ளிநின்று ஒருபார்வை யாளராகவே செயல்பட முடிகின்றது என்று விசனங்கள், இன்று வெளிப் படையாக எழுகின்றது. இந்த யுத்தியை தமிழகத்து தமிழ் தலைவர்கள் எந்த விதத்திலும் ஒரு முன்னெடுப்பை எடுக்க வில்லை அவர்கள் தமது அரசியலை நடத்துவதற்காக ஈழத்தமி ழர்களின் விடயத்தில் வெறும்வாய் மெண்ட வேதாளம் - விக்கிரமா கித்தனுக்கு சொன்ன கதைகளை போல் கதைகள் மட்டும் எடுத்துவிடுகி ன்றார்கள். மேலும் இலங்கையின் இனப்பிரச் சினைக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கல் மூலம் அல்லது சர்வகட்சி பிரதிநிதி குழுவின் அறிக்கையினை அமுல் படுத்துவதன் மூலம் தீர்வொன்றினை காணமுடியும். ஆனாலும் இவ்விடயத்தில் அவசரப்படு வதனால் எதுவிதப் பயனும் ஏற்படாது.

படங்களை ஓன்லைனில் அனிமேஷனாக படமாக(.gif) மாற்ற

இலங்கை சிறுபான்மைத் தலைவர்களின்
தரம் குறைந்த தான்தோன்றித்தனத்தால்
1987ம் ஆண்டு இருந்த நிலையை
இன்று திருப்பமுடியுமா???

இலங்கை அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதை மறந்து விடல் ஆகாது. இலங்கை இனப்பிரச் சினைக்கு இரண்டு விடயங் களில் தீர்வினை காணலாம். 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்வது அல்லது சர்வகட்சிகள் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கைகளை நடைமுறைப் படுத்துவது என்பவையே அவையாகும். இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன், 13 ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவின் குழந்தையாகும். அதனை ஆரோக்கியமாக நடைமுறைப்படுத்த இந்தியா உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த நிருபமா ராவ் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு தற்போது 22 வயதாகின்றது. இதனால் அது தன்பாட்டில் வளரும் என்று சுட்டிக்காட் டியுள்ளார். இந்தியா இலங்கையில் அமைக்கவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரம் வீடுகள் மலையகத்தில் அமைக்கப்படும் என்றும் நிருபமா ராவ் கூறியுள்ளார். எனினும் இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியா உள்ளது. அதனையே தற்போது மேற்கொண்டு வருகின்றது. இலங்கை விவகாரத்தில் இந்தியா வேகமாக செயற்படுவதற்கு பலதடைகள் இருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு இருந்த நிலைமை தற்போது இல்லை. எமது செயற்பாடுகள் வரையறு க்கப் பட்டவையாகவே தற்போது காணப் படுகின்றன.

பாஸ்வேர்ட் கொடுத்து சேமித்த  PDF File களை திறந்து படிக்க உதவும் தளம்

அரசாங்கத்தினதும் மக்களதும் பல்வேறு பிரதிநிதிகளிடம்

 நிலைகள் பற்றி தொடர்ந்து
வலியுறுத்தி வந்தார் நிருபமா ராவ

காணிகளில் இராணுவம் ஆட்கொள்ளும் நடவடிக்கை பற்றியும் நான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ விடம் எடுத்துரைத்தேன். இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கவனம் செலுத்தி வருவதாக அவர் என்னிடம் உறுதியளித்தார். இவ் விடயத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் மக்கள் திரும்பிச் செல்வார்கள் எனவும் அவர் எதிர்பார்க்கின்றார் செய்தியாளர் களிடம் கருத்து வெளியிட்ட நிருபமா ராவ் தாம் சுமார் ஒன்றரை நாட்கள் காலப் பகுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுமார் 1100 கிலோ மீற்றர் பயணம் செய்துள்ளதாக சுட்டிக் காட்டினார். இடம் பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டியது அவசியம் என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்திய வம்சாவழியினரின் வவுனியாவில் உள்ள காணிகளை மீளக் கையளிக்க இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். இடம் பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் ஆகிய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற் கு அப்பால் சென்று நாட்டை தசாப்த காலங்களாக சிவில் முரண்பாடுகளுக்குள் தள்ளிய இழுபட்டுச் செல்கின்ற இன விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என நேற்று மாலை செய்தியா ளர்களுடனான சந்திப்பின் போது குறிப்பிட்ட நிருபமா ராவ்,

Babelfish

அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு
விடயங்களில் அவதானம் செலுத்துவது
மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்

நீண்ட கால நோக்கில் சிறுபான்மை யினன் சில தேவ ைகளை மனதில் நிறுத்தி அரசியல் தீர்வு தொடர்பான விடயங் களையும் உள்வாங்கிச் செயற்படுவது அவசிய மானது என்று குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிப தியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப் பட்டதா என ஊடகவியலா ளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். ஜனாதிபதி அரசியல் தீர்வு தேவை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தொடர்ச் சியாக தெரிவித்தார். இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு திட்ட மிட்டுள்ளார். அவரது பார்வை இவ்விடய த்தில் உள்ளது. இவ்விடயத்தில் அவர் மிகுந்த அக்கறையுடனிருக்கின்றார் எனக் குறிப்பிட்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இந்தவேளையில் பொருளா தார விடயங்களுக்கு அதிகமான தாகவும் அபிவிருத்தி விடயங்களுக்கு மேலான தாகவும் அப்பால் சென்று அதிகமாக செயற்பட வேண்டிய அவசியமுள்ளது. அரசாங்கத் திலுள்ள அனைவரும் நாம் இவ்விடயத்தை எப்படிப் பார்க்கின்றோம் என்பதை உணர்ந்து கொண்டு ள்ளனர். இந்தியா இவ்விடயத் தை எவ்வாறு அணுகுகின்றது எங்ஙனம் நோக்குகின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கின் றார்கள் என நான் கருதுகின்றேன் எனக் குறிப்பிட்டார். இதேவேளை, இந்திய வம்சாவளி இடம்பெயர்ந்த மக்கள் 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் வவுனியாவில் மீளக் குடிய மர்த்தப் பட்டவர் களாவர். அவர்கள் தமது நிலத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் யுத்தத்தின் பின்னர் அவர்கள் மெனிக் பாமிற்கு இடம்பெயர நேர்ந்தது. அங்கு சுமார் 1000 அங்கத்தவர்களை உள்ளடக்கிய 150 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் வாழ்விடங் களுக்கு திரும்பிச் செல்வதில் சில கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். தமக்குரிய காணிகளை இராணுவத்தினர் கையகப் படுத்தி யுள்ளமையால் தாம் வாழ்ந்த பகுதி களுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத சிக்கல் நிலை காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டார்.

Google

இலங்கை விஜயம் மிகவும் ஆக்கபூர்வமானது
என இந்திய வெளி விவகாரச் செயலாளர்

நான் பெருமளவு இடங்களுக்கு செல்ல முடிந்ததுடன் அரசாங் கம், எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்பு களின் பிரதிநிதிகள், இடம் பெயர்ந்தோருக் கான முகாம் களிலுள்ள மக்கள் என பெரும் எண்ணிக்கையானவர்களை சந்தித்தேன் எனக் குறிப்பிட்ட அவர் சிறுபான்மையினர் மத்தியிலுள்ள அரசியல் கட்சிகளுடன் கலந்துரை யாட முடிந்ததாகவும் இது மிகவும் ஆக்கபூர்வமான விஜயம் என இந்திய வெளி விவகாரச் செயலாளர் செய்தியா ளர்களிடம் கூறினார். வடக்கு கிழக்கிற் கான தமது விஜயத்தின் போது சிறப்பான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டி ருந்ததாக ராவ் பாராட்டுத் தெவித்தார். நேற்று முன்நாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா அளித்த இராப்போசன விருந்துபசாரத்தில் பஸில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அரசாங் கத்தின் முக்கியஸ்தர்கள் பலருடன் இந்திய வெளிவிவகார செயலாளர் கலந்துரையாடியிருந்தார். தனது விஜயத்தின் போது தமிழ் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தற்கு அப்பால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவையும் சந்தித்ததாக நிருபமா ராவ் தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணு வத்தினர் இந்தப் பகுதிகளுக்குள் நகர்ந்து ள்ள தால் மக்களுக்கு சொந்தமான காணிக ளை விட்டுக் கொடுக்கவோ அங்கு அனுமதிக்கவோ இல்லை எனத் தெரிவித்த நிருபமா ராவ் அந்த வகையில் இவ்விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.

Promt

சிவராமின் ஆவி மன்னிக்காது

el;Gj; jsq;fs;

 

அன்று தொட்டு இன்று வரை இறமைகாத்து நிற்கும்
இந்தியர்களின் பிரஐhயுரிமை பறித்த நம் நாட்டரசு
சீனார்களுக்கு சிவப்புச்சீலை விரித்து வதிவிடம்வழங்கும்
திட்டதை ஊன்றுகின்ற இன்றைய மகிந்த சிந்தனை!!!

பருத்தியில் எத்தனை கொட்டை இருக்கின்றது என்று தெரியாது பருத்தியை வளர்க்கவும் மற்றும்;, தேயிலை, கொக்கோ, இரப்பர் போன்ற அந்நியநாட்டு செலவாணிகளை பாதுகாக்கவும், சர்வதேசத்தில் புகழும் தனிச்சிறப்பும் பெற்றதற்கு இந்திய தொழிலாளர்கள் தான் முதற்காரணம் என்பதை முழுமையாக மூடி மறைத்து தமிழர்களின் மேலாதிக்கத்தின் கைக்கூலிகளை வைத்து இந்திய அப்பாவிகளின் பிரஐhயுரிமை அதிகாரத்தை அகற்றி இந்திய பாரம்பரியத்துக்கு அழுவுகள் தேடிய இலங்கை இனவாதவெறியர்கள் இன்று இருக்கும் சிறுபான்மைக்கு ஒரு உரிமை கொடுத்து பிரச்சனைகளை தீர்த்து அரசியல் நடத்த வக்கற்றவர்கள் வேலியில் போன எதையோ ஏணிவைத்து பிடித்து மடியில் கட்ட எண்ணுகின்றது மகிந்த சிந்தனை என்ற இழிவான பதிவுகளை மகிந்த அரசும் அததை ஆளும் பாராளுமன்றத்து போக்கற்ற மந்திகளும்; இன்று சிவப்பு சேலை விரித்து சீனர்களுக்கு இலங்கையில் வதிவிட அனுமதியை வழங்க குத்திமுறிவது ஏன்??? என்ற கேள்விகள் மலையகத்தில் உள்ளவர்களையும் மற்றைய அரசியல் வட்டார பிரமுகர்கiயும் அதிர வைத்துள்ளது. இந்த வதிவிட அனுமதி கொடுக்கும் திரனை தன் அதிகாரத்தில் தன்னிச்சையாக எமுத்த ஐனாதிபதியால் சிறுபான்மையின் பிரச்சனைக்கு முடிந்த அளவு ஒரு சமரசதீர்வை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தையும் மற்றும் வளங்களையும் பெருக்க முயலக்கூடாது. அப்படி பெருக்க முன்னெடுக்கும் வழிகளை திறந்த மனதோடு மேசையில் வைத்து திறந்து வழிகளை நடத்தும் பொழுது எம்நாட்டின் உள்ள எந்த நாட்டு பிரiஐகளுக்கும் யாரும் எங்கும் வதிவிடத்தை அனுமதிக்க முடியும் அல்லவா? அப்படி செய்யாது இன்றைய குதக்கமான நிலைப்பாடு மேலும் பலத்த இனவாதத்தை உருவாக்கி வதிவிடம் தேடும் சீனர்களையாரும் கொலை செய்தால் அரசியல் ஆபாயகரமாக நிலைக்குள் தள்ளப்பட்டு நாட்டின் பொருளாதாரம் இருக்கும் மட்டத்தை விட்டு கீழ் செல்வதற்கு பல சந்தர்ப்பத்தை இன்று மகிந்த சிந்தனை முடுக்கின்றது என்ற அச்சம் பரவலாக பலர் மனதிலும் உதித்துள்ளது. என தமிழ் ஏடு ஆசிரியர். 

 

இலங்கையில் ஜனநாயக உரிமைக்கு
எந்த விதமான உத்தரவாதமும்
கிடையாது என்ற குற்றச்சாட்டு!!!

மக்கள் சார்பு அரசு என்று கூறிக்கெண்டு நாட்டு மக்களின் கண்களில் மண்ணைத் தூவும் அரசுதான் இன்று நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றது. அரசு தவறான நிலையில் தனது பயணத்தை மேற்கொண் டுள்ளது. தற்போதைய அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுமானால், எமது நாடு சர்வாதிகார நாடாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் காணப்பட்ட சுயாதீன ஆணைக் குழுவில் உள்ள சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு முற்றாக நீக்கப்படவுள்ளது. பொலிஸ் ஆணைக்குழு இல்லாது போனால், நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடும். அரசியல்வாதிகளின் முறை கேடுகளும் அதிகரிக்கும். நாளை நிச்சயமாக அரசியல் வாதியொருவரின் பிள்ளை பரீட்சையில் சித்தியடைய வில்லை என்றால் அந்த மாணவனின் ஆசிரியர் மரத்தில் கட்டப்படலாம். இவ்வாறான காரணங்களைக் கருத்தில் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்க்கத் தீர்மானித்தது. இந்த அரசை அதிகாரத்துக்குக் கொண்டுவர கை கொடுத்தவர்களில் ஜே.வி.பி.முக்கியமான கட்சியாகும். இன்று நான் ஜனாதிபதியுடன் பேசுவதாக குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். தவறான தலைவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு இன்று என்னை குறை கூறுவது அர்த்தமற்றதாகும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்
அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்கும்
முகமாக மக்கள்; தெளிவானமுடிவு எடுக்கவேண்டும்

குறுகிய நோக்கத்துக்காக ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாட்டைத் தோற்கடிப் பதற்கான பொறுப்பு எதிர்க்கட்சிக்கு மட்டுமின்றி அரசில் அங்கம் வகிப்போருக்கு முண்டு. அந்த வகையில் திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டாமென சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்துகின்றோம். சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்கும் முகமாக மக்களைத் தெளிவுபடுத்தி மக்கள் சக்தியைப் பலப்படுத்த நாடுபூராகவும் 20 இலட்சம் துண்டுப் பிரசுரங்களை ஜே.வி.பி.விநியோகிக்கித்தது. ஆனால் சிறுபான்மை கட்சிகள் என்ன செய்கின்றது? ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு தனித்து எதிர்க்கட்சிக்கு மட்டுமன்றி அரச கட்சியிலுள்ள வர்களுக்கும் உண்டெனவும் சுட்டிக்காட்டுகின்றது அல்வா?? மேலும் அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மக்களுக்கு உண்மையை மறைத்துத் தெளிவுபடுத்தாது அவசரமாக மேற்கொள்கின்றது. அரசியலமைப்பு என்பது நாட்டின் அடிப்படைச் சட்டமாகும். அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால் அதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். அத்துடன் அதை மக்கள் ஏற்க வேண்டும்.


அரசாங்கம் மக்களுக்கு மூடிமறைத்து
அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு
வந்து நிறைவேற்றிக் கொள்ளப் போகின்றது

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் முகமாக நாம் 20 இலட்சம் துண்டுப் பிரசுரங்களை நாடு பூராகவும் விநியோகிக் கவுள்ளோம். இதன் மூலம் மக்கள் சக்தியைப் பலப்படுத்தி சர்வாதிகார செயற்பாட்டைத் தோற்கடிப்போம். இதற்காக அணிதிரள்வோம். மேற்படி விநியோகிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க விஜிதஹேரத் மற்றும் ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் லால்காந்த ஆகியோர் பங்குபற்றினர் மேலும் அரசாங்கம் மக்களுக்கு மூடிமறைத்து அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளப் போகின்றது. அரசியலமைப்புத் திருத்தமானது நாட்டுக்கு நன்மையானால் முன்கூட்டியே வெளிப்படுத்தியிருக்கும். இதனை மூடிமறைத்துச் செய்வதற்குக் காரணம் அதிகாரங்களைக் கையில் எடுத்து சர்வாதிகாரப் போக்கில் செயற் படுவதற்கேயாகும். நாட்டிற்குப் பாதகமான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பது பொய் மற்றும் வஞ்சக வழியிலாகும். இந்தத் திருத்தத்தின் மூலம் மக்களுக்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. அதுபோல் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையைப் பாதுகாக்க முடியாது என்பதுடன் தேசிய பிரச்சினை யைத் தீர்ப்பதற்கோ ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கோ எதுவுமில்லை.


40 வருடங்கள் நாட்டுக்காகப் போராடிய
ஒரு தளபதியை பழிவாங்கும் ஆளும்
ஐனநாயகம் என்ற விசனம்!!

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பட்டங்கள், பதக்கங்களை பறிப்பதோடு மட்டும் அரசாங்கம் நின்றுவிடவில்லை. அவரைப் பழிவாங்கும் மனப்போக்கு மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. அரசு அவரது ஓய்வூதியத்தைப் பறித்து வயிற்றிலடித்துவிட்டது. 40 வருடங்கள் நாட்டுக்காகப் போராடிய ஒருதளபதியின் அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றது. இது என்றும் ஐனநாயக பாதைகள் அல்ல. எமது நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாக அரசு வெளி உலகுக்குக் காட்ட முனைந்தாலும், இங்கு நடப்பவற்றை சர்வதேசம் நன்கு அவதானித்த வண்ணமே உள்ளது. அன்று நாட்டின் சிறந்த தளபதி, சிறந்த அரச ஊழியர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தேசத்துரோகியாக்கப் பட்டிருக்கின்றார். ஜெனரல் பொன்சேகாவின் ஓய்வூதியம் பறிக்கப் பட்டிருப்பது ஏனைய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். இந்த ஆபத்திலிருந்து அரச ஊழியர்களைப் பாதுகாத்துக் கொள்வதற் காக அரசியல் பேதம் பாராமல் சகல அரச ஊழியர் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராடத் தயாராக வேண்டும். இதற் கெல்லாம் கால அவகாசம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அனை வரும் உடனடியாக போராட்டக் களத்தில் இறங்கவேண்டும். மேலும் அரசாங்கத்தின் தவறான பயணத்தை தடுத்து நிறுத்தி நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் உடனடியாக ஒன்றுபட்டுப் போராட அணிதிரள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.


அரசியல் குறுகிய நோக்கத்திற்காக அபாண்டமான
பிரச்சாரங்களை எதிர்கட்சிகள் மேல் சேறுபூசஎண்ணுவது
ஆளும்கட்சியின் ஆரோக்கிய மற்ற அரசியல் அல்ல

நாட்டின் ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாட்டைத் தோற்கடிப் பதற்கான முற்சிகளை மேற்கொள்ளவேண்டிய ஐனாதிபதி. இன்று, தனது தெளிவற்ற அரசியல் திருத்தங்களுக்கு எதிர்க் கட்சியினர் துணை நிற்கவில்லை என்ற காரணத்தை மட்டும் மனதில் வைத்து. அவர்கள் பயங்கரவாதத் திற்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டுவது, ஆரோக்கிய அரசியலுக்கு உகந்தது இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் ஆய்வுகளை வெளியிடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தை முன்னெடுக்க பணம் இல்லை என கூறி எதிர்க்கட்சி 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தை முன்னெடுக்க முடிய வில்லை எனக் கூறிய எதிர்க்கட்சியினர் புலிகளுக்கு நிதிகளை வழங்கினர். இந்த நிலையில் தமது அரசாங்கம், நிதி பற்றாக்குறை இருந்த நிலையிலும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அபிவிருத்தியையும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை யுத்தம் நிறைவடைந்து விட்ட போதும், அபிவிருத்தி பணிகள் நிறைவடையாது முழுமை யான பயனை பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இன்று புலிகளுக்கு முதல் வழிகாட்டியாக இருந்த தலைவர்களுடன் ஆளும்கட்சி கைகோர்த்து விசாரணை கள் இன்றி ஆட்சி நடத்துகின்றது. அமைச்சர் பதவிகள் வழங்குகின்றது. எனினும் எதிர்கட்சிகள் பணம் கொடுத்ததாக கூறும் குற்றுச்சாட்டுக்களுக்கு உரிய ஒரு ஆதாரங்களும் இதுவரை வெளிக்கொண்டு வரவில்லை என்ற பதிவிலும் இல்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகிறன.

மஹிந்தசிந்தனை

 

மக்களை ஏமாற்றி அள்ளியடித்த கொள்ளையில்!
கிள்ளிக்கொடுக்க வக்கற்றவர்களே நீங்கள்!!
எவ்வளவு காலம் மாராப்புக்குள் மறைவீர்கள்???

அன்று எல்லையில் நின்று, விடியும் வரை விடுதலை கேட்ட எம்போராளிகள் - இன்று வீதியில் மடியேந்தி நிற்கும் நிலைகை;கு தள்ளிய ஐரோப்பிய புலம்பெயர் வானர்களே!!! ஒருபிடி சோறு கிடைக்குமா? என்று, ஏக்கத்தில் மண்ணையும் வின்னையும் பார்த்து நாதியற்று மடிந்து போகின்ற எமுறவுகள், அங்கே. தாயகத்தில் “தாகத் தோடு“ இருக்கும் பொழுது, புலம்பெயர் நாடுகளில் இன்றும் வீராப்புபேசி மாராப்பிற்குள் மறைந்து வாழும் மதிகெட்ட மன்னர்களே!

வெளியில் வாருங்கள்!!
பசியி;ன் பக்குவத்தை நாம் உங்களுக்கு சித்தரிக்கத் தயாராக உள்ளோம்!!! தூங்கத் தாயின் மடியின்றி! வாழவழிகள் இன்றி!! புரண்டுதிரிய பலமான புரதமான உணவுகள் இன்றி!!! தவிக்கும் அந்த எம்முறவுகள்;!!! வருவேரையும் போவோரையும் அந்நாந்து பார்கின்ற அந்த பச்சை மண்களின் பரிதாப நிலைகள்!!! அவர்களுக்கு, நீங்கள் கை நிறைய அள்ளிக் கொடுக்கா விட்டாலும் பாதகமில்லை. கிள்ளிக்கொடுக்கத் தான் முடியாதா??? எதற்காக நீங்கள் மாராப்பில் மறைந்து வாழ்கின்றீர்கள்!!!
உங்களை பணம் தாருங்கள் என்று கேட்கவில்லை ஏன் தெரியுமா? பணத்தை எப்படி சுருட்டுவது என்று கற்ற நீங்கள் எம்மை நம்ப மாட்டீர்கள் என்று எமக்குத் தெரியும் ஆனால் நீங்கள் உழைத்த பணத்தை நாங்கள்; கேட்டகவில்லை. மற்றவர்களை துரோயாக்கி மன்னாராக வாழ எண்ணி, மக்களிடம் அடித்த கொள்ளையில் இன்று கிடைப்பதை கிள்ளிக் கொடுக்க ஏன் தயங்குகின்றீர்கள்?


சித்திரா என்ற போராளி இருபிள்ளைகளை

தவிக்கவிட்டு உலகத்தை விட்டு மறைந்த

 கதை உண்மைச் சம்பவம்.....

மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என வீராப்பு பேசிக்கொண்டு விடுதலைப் போராட்டத்தின் பேரால் சொத்துக்களை பதுக்கி வைத்துக் கொண்டிருப் பவர்களின் காதுகளில் மட்டும் இந்த அவலங்களும் அழுகுரல்களும் கேட்பதாக தெரியவில்லை. விடுதலையின் பேரால் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துகள் மேற்குலக நாடுகளில் பலரின் கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சித்திரா வேண்டி நின்றதெல்லாம் 38 ஆயிரம் ரூபா மட்டும்தான். மேற்குலக நாடுகளில் மக்களின் பணத்தில் ஏப்பம் விடுபவர்களுக்கு எங்கே சித்திரா போன்றவர்களின் அழுகுரல் கேட்கப் போகிறது. தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கை யோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டுவிடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் அத்தனையையும் தவிடு பொடியாக்கும் வகையிலேயே இன்று சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் மட்டக்களப்பு பன்குடாவெளியில் நடைபெற்ற ஒரு சம்பவம் இனவிடுதலைக்காகவும் அந்த விடுதலைப் போராட்டத் திற்காகவும் முழுக் குடும்பமுமே தம்மை அர்ப்பணித் திருந்தவர்களுக்கு இந்த சமூகம் கைகொடுக்க தவறிவிட்டதே என்ற வேதனையும் ஆதங்கமுமே மேலோங்கியிருக்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்த ஒரு குடும்பம். கடந்த வாரம் அந்த குடும்பத்தில் எஞ்சியிருந்த போராளித் தாயும் இறந்து போனபோது அவர்களின் இரு பிள்ளைகள் இன்று யாரும் அற்ற அனாதைகளாக்கப் பட்டிருக்கிறார்கள். மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என மேற்குலக நாடுகளில் இருந்து வீரப்பிரதாபம் பேசிக்கொண்டிருப் பவர்களுக்கு அந்த குழந்தைகளின் அழுகுரல்கள் கேட்டிருக்காது. கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் எத்தனை கோடி ரூபா என்றாலும் தருகிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு மட்டக்களப்பில் தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவை நிறுத்த வேண்டும் என லண்டனிலிருந்து கங்கணம் கட்டி நின்ற அந்த அரசியல் வாதிக்கு கூட தனது பிரதேசத்தில் கேட்கும் அவலக்குரல்கள் கேட்டிருக்காது. ஏனெனில் அவர்கள் அந்த அழுகுரல்கள் கேட்கும் திசையை நோக்கி தமது புலன்களை செலுத்த தயாராக இல்லை. அவர்கள் பயணிப்பதெல்லாம் தமது மக்களை பலிகொடுத்து தமது சொகுசு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகத் தான்.
பெண்போராளியான ஒரு தாய் தனது மருத்துவ செலவுக்கு வேண்டிநின்றதெல்லாம் வெறும் 38ஆயிரம் ரூபாதான். ஆனால் அந்த பணம் அவளது கைகளுக்கு கிடைக்காமலே இந்த மாதம் 17ஆம் திகதி தனது இரு குழந்தைகளையும் அனாதைகளாக விட்டு இந்த உலகைவிட்டு பிரிந்து போனாள். அவள் மட்டுமல்ல அவளின் கணவன், தந்தை என முழுக்குடும்பமுமே இனவிடுதலைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்தவர்கள்தான். அப்படிப்பட்ட ஒரு தியாக குடும்பத்தின் வாரிசுகளான இரு பிஞ்சுக்குழந்தைகள் இன்று அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
செங்கலடியிலிருந்து 4கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளைவீதியில் அமைந்துள்ள கிராமம்தான் பன்குடாவெளியாகும். பன்குடாவெளியாகும். பல போராளிகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் தந்த கிராமம்தான் அது. அக்கிராமத்தில் பிறந்தவள்தான் சித்திரா என்ற ஷகிலா. அவளது தந்தை சீனித்தம்பி பத்மநாதன் அந்த கிராமத்தில் மிக வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். வயல் காணி என பொருளாதார ரீதியில் எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்த குடும்பம்.
இந்திய இராணுவம் வடகிழக்கை ஆக்கிரமித்திருந்த வேளையில் விடுதலைப்புலிகள் காடுகளிலேயே தஞ்சமடைந்திருந்தனர். இனவிடுதலையை நேசித்த பத்மநாதன் விடுதலைப்புலிகளுக்கு உணவு உட்பட அனைத்து உதவிகளையும் கொண்டு சென்று சேர்ப்பிப்பதில் அவரும் அவரது குடும்பமும் பெரும்பங்களிப்பு செய்தது.
இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த போது மட்டக்களப்பு அம்பாறை பிரதேச போராளிகள் காடுகளில் சில இடங்களில் குழுக்களாக தங்கியிருந்தனர். வாகரை, அம்பாறை காட்டுப்பகுதிகளில் இரு குழுக்களும், தாந்தாமலை, மாவடிஓடை, புலுட்டுமானோடை, தொப்பிக்கல், கார்மலை, மீசைக்கல்திடல் ஆகிய அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏனைய மூன்று குழுக்களும் தங்கியிருந்தனர். இவர்களில் மாவடிஓடை, புலுட்டுமானோடை, தொப்பிக்கல், கார்மலை போன்ற காட்டுப்பகுதியில் இருந்த போராளிகளுக்கு உணவுப்பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதில் பத்மநாதன் பெரும்பங்கு வகித்தார். சகல காட்டுப்பாதைகளையும் பரிச்சயமாக கொண்ட பத்மநாதன் மகியங்கனை வீதிவரை போராளிகளை கொண்டு சேர்த்திருக்கிறார். பத்மநாதன் அண்ணன் என்றால் அப்போதையை போராளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒருவர்.
ஒரு சந்தர்ப்பத்தில் மறைந்திருந்த போராளிகளுக்கு உணவுப்பொருள்களை எடுத்து சென்ற போது இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பத்மநாதன் இந்திய இராணுவத்தாலும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய தமிழ்குழுக்களாலும் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர் சிறைவைக்கப்பட்டிருந்த அவர் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் விடுதலையானார்.
விடுதலையான பத்மநாதன் 1990ம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் இராணு வத்திற்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து படுவான்கரைப் பிரதேசத்தில் செயற்பட்ட விடுதலைப்புலிகளுக்கு பல வழிகளிலும் தொடர்ந்து உதவி செய்து வந்தார். இதனால் ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும் பல முறை தாக்கப் பட்டிருந்தார்.
அதன் பின்னர் 1991 ஏப்ரல் 25ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் இலுப்பையடிச் சேனையில் வைத்து பத்மநாதன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். காலில் காயமடைந்த பத்மநாதனை கரடியனாறு இராணுவ முகாமுக்கு கட்டி இழுத்து சென்றனர். பின்னர் சடலத்தை கூட அவரின் குடும்பத்தினருக்கு இராணுவத்தினர் கொடுக்க வில்லை. அவரின் தேச விடுதலைப்பற்றையும் விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் மதித்து விடுதலைப்புலிகளின் தேசியத்தலைமை அவருக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளித்திருந்தது.
அவரது மூத்தமகள் ஷகிலா 1990ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்போராளியாக இணைந்து சித்திரா என்ற பெயரோடு ஆயுதப்போரட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.1990 ஜனவரியில் விடுதலை புலிகளின் மக்கள் முன்னணி அரசியல் கட்சியின் உருவாக்கத்தை தொடந்து வாகரையில் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டது இம் மகாநாடுக்கு விடுதலைப்புலிகளின் மகளிர் அமைப்பு பிரதிநிதி சுந்தரியும் வருகை தந்திருந்தார். அங்கு வந்த அவர் பெண்கள் மத்தியில் நடத்திய பல சந்திப்புக்களை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து பல பெண்போராளிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். அந்த பெண் போராளிகளில் ஒருவர்தான் பன்குடாவெளி பத்மநாதனின் மகள் ஷகிலா என்ற சித்திரா. க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றிருந்த அவர் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்பிருந்த போதிலும் அதை துறந்து இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு சென்ற சித்திரா அங்கு ஆயுதப்பயிற்சி பெற்று போராட்ட களத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார். 1991 முற்பகுதியில் ஆனையிறவு சமரின் போது சித்திரா காயமடைந்தார். அவரது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஓரளவு குணமடைந்த சித்திரா தொடர்ந்து பல களங்களைச் சந்தித்தார். சித்திரா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டதையடுத்து அவரது கிராமத்தை சேர்ந்த அவரது காதலனான உருத்தியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு வன்னியில் திருமணமும் நடைபெற்றது.இரு பிள்ளைகள் பிறந்ததை தொடர்ந்தும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்ததாலும் சித்திரா இயக்க பணிகளிலிருந்து விலகியிருந்தார். ஆனால் அவரது கணவன் உருத்தி தொடர்ந்து போராட்ட களத்திலேயே இருந்தார்.
வன்னியிலிருந்த உருத்தி 2007ஆம் ஆண்டு இயக்க பணிகளுக்காக மட்டக்களப்பு தளவாய் பகுதிக்கு அனுப்பபட்டிருந்த போது 2007ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இவருக்கு விடுதலைப்புலிகளால் மேஜர் தரம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தனது இரு பிள்ளைகளுடன் பன்குடாவெளியில் வாழ்ந்து வந்த சித்திரா ஆனையிறவு சமரின் போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் நீண்டகாலமாக அந்த நோவினால் பாதிக்கப் பட்டிருந்த சித்திராவுக்கு முள்ளந்தண்டில் சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். அதற்காக அவளுக்கு 38ஆயிரம் ரூபா தேவைப் பட்டது. தனக்கு தெரிந்த வெளிநாடுகளில் உள்ள சிலரிடமும் உதவியை கோரியிருந்தாள். ஆனால் அந்த உதவி அவளுக்கு கிடைக்காமலே இந்த மாதம் 17ஆம் திகதி (17.08.2010) தனது இரு பிள்ளைகளையும் தவிக்க விட்டு இந்த உலகை விட்டே சென்றுவிட்டாள். அவள் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முதல் வெளிநாடு ஒன்றில் தற்போது தஞ்சம் அடைந்திருக்கும் போராளி ஒருவருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தனது பிள்ளைகள் இரண்டும் அநாதைகளாக போய்விடப் போகிறார்கள் என கவலைப்பட்டிருந்தார்.
விடுதலையின் பேரால் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துகள் மேற்குலக நாடுகளில் பலரின் கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சித்திரா வேண்டி நின்ற தெல்லாம் 38ஆயிரம் ரூபா மட்டும்தான். மேற்குலக நாடுகளில் மக்களின் பணத்தில் ஏப்பம் விடுபவர்களுக்கு எங்கே சித்திரா போன்றவர்களின் அழுகுரல் கேட்கப் போகிறது.
சித்திராவின் தந்தையும் அவரது குடும்பமும் விடுதலைப்புலி போராளிகளுக்கு செய்த உதவிகள் கொஞ்சம் அல்ல. ஓடி ஒடி உதவி செய்த குடும்பத்தின் வாரிசுகள் இன்று அனாதைகளாக நடுவீதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். போராளிகளுக்கு அவரது குடும்பம் செய்த உதவிகளில் ஒன்றை இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளரும் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு வடக்கு வட்டவையின் தலைவராகவும் இருந்த சட்டத்தரணி வேணுதாஸ் 1990 யூன் மாதத்தின் பின் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு முழுநேரமாக இணைந்து பன்குடாவெளிப் பகுதியிலேயே இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக மட்டக்களப்பு நகரிலிருந்து சென்ற வேணுதாஸின் மனைவியை இராணுவத்தினர் பிடித்து சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டு செங்கலடி கறுப்பு பாலத்திற்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் போட்டிருந்தனர்.
அதை அறிந்த பத்மநாதனும் சிலரும் அங்கு சென்று வேணுதாஸின் மனைவியின் சடலத்தை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு வந்தனர். சவ அடக்கத்தை செய்திருந்தனர். அதன் பின்னர் சிறிது காலத்தின் பின்னர் வேணுதாசும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இதேபோன்றுதான் வேணுதாஸின் இரு பெண் பிள்ளைகளும் தாய் தந்தையை இழந்து அனாதைகளாக்கப்பட்டிருந்தனர்.
வேணுதாஸின் மரணம் குறித்து மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகள் தலைமைப் பீடத்திற்கு அறிவிக்கவே இல்லை. தமிழ் இளைஞர் பேரவையின் மட்டக்களப்பு செயலாளரும் பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட சட்டத்தரணி வேணுதாஸ் பற்றி ஈழநாதம் பத்திரிகையில் செய்தி வெளிவந்த போதுதான் அதை அறிந்து கொண்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வேணுதாஸிற்கு மேஜர் தரம் வழங்கி மதிப்பளித்திருந்தார். வேணுதாஸ் தனது ஆரம்பகால நண்பர் என்பதையும் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல விடுதலைப் போராளிகள் ஆதரவாளர்கள் என அனைவருக்கும் உதவிகளை செய்து வந்த ஒரு குடும்பம்தான் பன்குடாவெளி பத்மநாதனின் குடும்பம். தமிழ் இனத்தின் விடுதலையை அதீதமாக நேசித்ததன் காரணமாக அவரின் பேரப்பிள்ளைகளான சங்கீதா (11வயது) சங்கீத் (7வயது) ஆகியோர் இன்று யாரும் அற்ற அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவரின் போராளி மகள் வெறும் மருத்துவச் செலவுக்கு 38ஆயிரம் ரூபா கிடைக்காமல் இந்த உலகை விட்டு சென்று விட்டாள்.
யுத்தத்தின் கோரத்தின் ஒரு துளிதான் சித்திராவின் கதை. சித்திராவைப்போல ஆயிரம் ஆயிரம் போராளிகளும், போராளிகளின் இழப்பினால் அனாதைகளாக்கப்பட்ட ஆயிரக் கணக்கான குழந்தைகளும் மட்டக்களப்பு வன்னி என தமிழர் தேசம் எங்கும் காணப்படுகின்றனர். ஆனால் அவர்களின் அழுகுரல்களை மட்டும் இந்த சமூகம் கேட்கமறுக்கிறது.
மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என வீராப்பு பேசிக்கொண்டு விடுதலைப் போராட்டத்தின் பேரால் சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டிருப்பவர்களின் காதுகளில் மட்டும் இந்த அவலங்களும் அழுகுரல்களும் கேட்பதாக தெரியவில்லை. கேட்டாலும் அதைப்பற்றி இரங்குவதற்கு அவர்களுக்கு மனங்களும் இல்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் அழுகுரல்களின் ஊடாக அவலங்களின் ஊடாக மரணங்களின் ஊடாக தமது சொகுசு வாழ்க்கையை அமைப்பதுதான் இந்த வீராப்பு பேசுபவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் வடக்கு கிழக்கில் எஞ்சியிருக்கும் தமிழ் இனமும் அழிந்து போகவேண்டும் என்பதுதான்.
இப்போது தமிழ் இனம் வேண்டிநிற்பதெல்லாம் ஆயிரக்கணக்கில் அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்பதுதான். இனவிடுதலைக் காக தங்களை ஆகுதியாக்கிய அந்த தாயினதும் தந்தையினதும் ஆத்மாக்கள் வேண்டு தெல்லாம் தங்களின் குழந்தைகளின் கண்ணீரை துடையுங்கள் என்பதுதான். அனாதைகளாக்கப்பட்ட சித்திராவின் இரு பிள்ளைகளைப்போல கண்ணீருடன் எதிர்காலத்திற்காக ஏங்கி நிற்கும் பிஞ்சுகளுக்கு யார் உதவ முன்வருவார்

தமிழ் ஏடு ஆசிரியர்.

www.EERAANAL.ORG          gbt-bern@bluewin.ch

மக்களினால் மக்களுக்கு எழுதப்படும் செய்திகள்